20.11.07

Slide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்

பதிவில் நமது ஒளிப்படங்களை வெளியிடும் போது ஒன்றிரண்டு படங்கள் எனில் பரவாயில்லை ஆனால் பல படங்களை காட்சிப்படுத்தும் போது வரிசைக்கும் அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்னமோ அது பிடிக்கவில்லை. ஏற்கனவே Light Box என்ற நுட்பம் ஊடாகவும் முன்பு படங்களை காட்சிப்படுத்தியிருந்தேன்.

இருந்தும் Slide show ஊடாக படங்களைக் காட்சிப் படுத்த விரும்பி இணையத்தை நோண்டியதன் விளைவு இப்பதிவு. Photoshop Flash முதலான செயலிகளில் நாமாகவே நமக்கான Slide show க்களைத் தயாரிக்க முடியும். ஆயினும் தயாரித்தலின் பிற்பாடு செயலிகள் உருவாக்கித் தரும் ஜாவா ஸ்கிரிப்ட் xml ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிப்படுத்த வேண்டிய படங்கள் என அனைத்தையும் தரவேற்றியோ நிரலில் இணைத்தோ என ஏகப்பட்ட சில்லெடுப்புக்கள் உண்டு. தவிர புதிதாக படங்களைச் சேர்க்க விரும்பும் போது நிரல்களிலும் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும்.

இவற்றிற்கான இலகுவான தீர்வாக அமைகிறது PicToBrowser.

Flickr தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கி படங்களை குறிச்சொல் குறிப்புடன் தரவேற்றுங்கள்.

இங்கே நான் காட்சிப்படுத்தியிருக்கும் படத்தொகுப்பில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Info தொடுப்பை அழுத்துங்கள். மிகுதியை நீங்களே முடித்துக் கொள்வீர்கள்.

ஏற்கனவே ஒரு slide show இனைத் தயாரித்து பதிவிட்ட பின்னர் கூட பதிவுகளில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமலேயே புதிய படங்களை இணைக்கலாம். அதாவது முன்னர் காட்சிப்படுத்திய குறிச்சொல்லின் (Tag) குறிப்புடன் தரவேற்றப்படும் படங்களும் உங்கள் தொகுப்பில் இணைக்கப்படும்.

இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் அவ்வப்போது நான் கிளிக்கியவை.


17.11.07

ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..

ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?)

சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.

ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)

வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )

அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே :( )

இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.

அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும்.

பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..

அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது :)

12.11.07

கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...


11.11.07

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?


Photobucket - Video and Image Hosting