14.6.07

Cherry பழம் போல் சிவந்த..

சிறு வயதுகளில் கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதன் மேலே தனித்த இனிப்புடைய சிவந்த பழமொன்றை வைத்திருப்பார்கள். சில கேக் வகைகளிலும் அந்தப் பழம் இருப்பதுண்டு. அவை cherry பழங்கள் என தெரியும். இங்கே கீழ்வரும் பழங்களும் cherry (ஜெர்மன் மொழியில் Kirshe)எனப்படுகின்றன. சிவப்பாகிப் பின்னர் சாப்பிடக் கூடிய நிலையில் ஒரு வித கருஞ் சிவப்பு நிறத்திற்கு வருகின்றன. சுவையில் கூட ஊரின் நாவற் பழத்தை நினைவு படுத்தும் விதத்தில் கொஞ்சம் புளிப்பாக இருக்கின்றன.

உறுதிப் படுத்தப் படாத தகவல்களின் படி.. (களத்தில நின்றால் உறுதிப் படுத்திச் சொல்லலாம் :))இரண்டும் ஒரே வகைதான் எனவும் இப் பழங்கள் உள் விதையெடுக்கப்பட்டு இனிப்பில் பதப்படுத்தப் பட்ட பின்னர் மேற் சொன்ன வகைப் பழமாகிறது எனவும் சொன்னார்கள். இது பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்களேன்..

இவை வீட்டு சூழலில் விளைந்தவை.



6 Comments:

Anonymous Anonymous said...

ஐயோ!!!!!! என்ன கொடுமை sir இது.....Kg $15அடாப்பா இங்க.... ஆகா அப்ப நீங்க சும்மாவே சாப்பிடுவீயளா...... hmmm.....வேணா அப்புறம் நான் அழுதிடுவன்.....

6:36 PM  
Anonymous Anonymous said...

Cherry and Jambul(Naval Pazham) are different and they belong to diifferent families.While Cherry belong to family Rosaceae,the Naval belongs to family Myrtaceae.But both have medicinal values.The Cherry is said to reduce pain and inflammation the Naval is recommended to Diabetic patients.

6:49 PM  
Anonymous Anonymous said...

//Cherry பழம் போல் சிவந்த.. //
then... wat?

4:32 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
உங்கள் தோட்டப்பழமா? நல்ல இனிப்பாக இருக்கும் போல் உள்ளது. மரங்களில் உள்ள பழமும் செங்காய் போல் இருக்கும் இதுவும் ஒரு வகை.பழுத்தாலும் இதுவே நிறம்;
ஆனால் நாவல் பழத்துக்கும் இதற்கும் உருவிலும், நிறத்திலும் , சுவையிலும் வேறு பாடு உண்டு.
மரங்களும் வித்தியாசமானவை.நாவல் உயரமாக வளரும் மரம்.
நாவல் விதைக்குப் பலமான ஓடில்லை.
ஆனால் நாவல் பழம் இவ்வளவு விலை விற்பதில்லை.

5:21 AM  
Blogger சயந்தன் said...

//Kg $15அடாப்பா இங்க.... //
எங்கை..?

1:27 PM  
Anonymous Anonymous said...

"எங்கை??? ....."
எங்கையோ அதுதான் எங்கட ஏழுமலை woolworths...லை தான்....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... இப்ப நீ எல்லாம் மறந்திட்டாய் என.....

11:12 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home