20.5.07

மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே...

வேறொன்றும் இல்லைங்க... சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான விசயம். அவ்வப் போது பாடியுமிருக்கிறம் எண்டு சொல்லி உங்களை இப்பவே எச்சரிக்கையும் செய்யிறம்.

வழமையாவே நாங்கள் ஒலிப்பதிவுகளைத் தொடங்கிறதும் முடிக்கிறதும் மொட்டையாத்தான். தொடங்கும் போதாவது வணக்கம் சொல்லுவம். முடியும் போது அதுவுமில்லை. ஆனா இந்த முறை இந்த ஒலிப்பதிவு நீங்கள் ஆரும் எதிர்பார்க்கா வண்ணம் முடிஞ்சிருக்கு. அது என்னெண்டு அறிய ஒலிப்பதிவை முழுசாக் கேளுங்கோ எண்டு சொல்லுறது வீண்வேலை. ஏனென்டால் நீங்கள் ஓட விட்டும் கேட்பியள். எப்பிடியெண்டாலும் கேளுங்கோ.. ஆனா கடைசி நிமிடங்களைக் கேட்கத் தவற வேண்டாம். Play பொத்தானை அழுத்திய பின்னர் சற்றுத் தாமதித்தே ஆரம்பிக்கவும். பொறுமை காக்கவும்


44 Comments:

Blogger வி. ஜெ. சந்திரன் said...

எங்களது உரையாடலில் சொல்லப்பட்ட தகவலில் ஒரு தவறு இருக்கிறது அதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

2:42 PM  
Blogger சின்னக்குட்டி said...

வசந்த மாளிகை பாடல் அல்ல

பாசமலர்

2:54 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படம் பார்ப்பதற்கு முன் எனக்கு உன்னாலே உன்னாலே படத்தில இருந்து உன்னாலே உன்னாலே பாட்டு பிடிச்சது..படம் பார்த்த பிறகு, முதல் நாள் இன்று பிடிச்சிருக்கு..

கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் தீபாவளி படப்பாடல்கள் பிடிச்சிருந்தது...

சிவாஜி வந்த சூட்டில் கேட்டதோடு சரி. இப்ப திரும்பக் கேட்கத் தோணலை

3:00 PM  
Blogger அற்புதன் said...

கிளைமக்சில சிநேகிதிக்கு விழுந்த அடியின்ர சத்தத்தை எடிட் பண்ணிப் போட்டீங்களோ?:-)

3:06 PM  
Blogger கானா பிரபா said...

This comment has been removed by the author.

3:20 PM  
Blogger சின்னக்குட்டி said...

இளம் ஆள் ஒராள் சிநேகதியின்ரை சிநேகதியோ தெரியாது பழைய பாடல் ஒன்றுக்கு கே.ஆர்.விஜயா மாதிரி ஆடி பாடுறா இங்கே அழுத்தவும்

3:43 PM  
Anonymous Anonymous said...

SAYANTHAN AND SENEHATHY , ARE YOU GUYS HAVING MENTAL ISSUES?

ARUKAMA PONGADA

4:51 PM  
Blogger Haran said...

சயந்தன்,
உங்களது ஆக்கங்களைக் கேட்கப் புல்லரிக்கின்றன... எப்படி இப்படி எல்லாம்.... :P ஹஹஹாஹ...

ஒவ்வொரு பதிவும் வித்தியாசமானவையாக உள்ளன.

அதுசரி... வி.ஜெ... என்ன இந்தப் பதிவில் ஒரு பிழையா?? எத்தினை பிழை இருக்கு... அவை எல்லாத்தையும் எழுத வெளிக்கிட்டால்... இங்கை இடம் காணாது:P

வி.ஜெ ஒரு கூடை சண் லைட் பாட்டு நீங்கள் கட்டாயம் கேக்க வேணும்... அந்தப் பாட்டுக்கு ரஜனி எப்பிடி ஆடப் போறார் எண்டு கற்பனை பண்ணிப் பார்த்துப் பார்த்தே நான் கதி கலங்கிப் போய் நிக்கிறன்.

சினேகிதி, அம்மா தேடுறா... கெரியா ஓடிப் போங்கோ...

5:54 PM  
Blogger சயந்தன் said...

கானா பிரபா..
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்காம். :)

என்னைய்யா எழுதீனீங்கள்.. அதை அறியாமல் தலையே வெடிச்சிடும் போல இருக்கு

9:39 PM  
Anonymous Anonymous said...

கிளைமாக்ஸ் அற்புதம் !

12:24 AM  
Anonymous Anonymous said...

எங்க சோமியைக் காணேல்லை...?

-வட்டச் செயலாளர்
சோமிஸ் ரசிகர் மன்றம்

12:40 AM  
Anonymous Anonymous said...

//எங்க சோமியைக் காணேல்லை...?

-வட்டச் செயலாளர்
சோமிஸ் ரசிகர் மன்றம்//

இவ்வாறான பின்னூட்டங்களுக்குப் பின்னால் சோமியே இருக்கலாம் என ஒரு மத்தியானத்து கழுகு தெரிவித்துப் போனது.

2:44 AM  
Anonymous Anonymous said...

கிளைமக்சில சிநேகிதிக்கு விழுந்த அடியின்ர சத்தத்தை எடிட் பண்ணிப் போட்டீங்களோ?:-)

:))))))))))

7:42 AM  
Anonymous Anonymous said...

//எங்க சோமியைக் காணேல்லை...?

-வட்டச் செயலாளர்
சோமிஸ் ரசிகர் மன்றம் //

தல குவாட்டரடிச்சிட்டு குப்புறப்படுத்திட்டாப்பல..

1:23 PM  
Blogger சினேகிதி said...

\\SAYANTHAN AND SENEHATHY , ARE YOU GUYS HAVING MENTAL ISSUES?

ARUKAMA PONGADA\\

ean neenga VJ fan a?

2:47 PM  
Blogger சினேகிதி said...

அற்புதன் அண்ணா u too?

2:47 PM  
Blogger மலைநாடான் said...

//அதுசரி... வி.ஜெ... என்ன இந்தப் பதிவில் ஒரு பிழையா?? எத்தினை பிழை இருக்கு...//

வழிமொழிகின்றேன்.:))

2:51 PM  
Blogger U.P.Tharsan said...

பழைய பாடல்களை நான் தமிழ்வார்தைகளுக்காக மட்டுமே கேட்பதுண்டு. இடைக்கால பாடல்களை இசைக்காக கேட்பதுண்டு. இன்றைய பாடல்களை காட்சியாகவே அதிகம் பார்க்கப்பிடிக்கும். நிறைய பாடல்களை நினைவூட்டியிருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல உங்களுடைய அரட்டை ஆர்வம் சூப்பர். அடி விழ விழ அரட்டை அடிக்கிறீர்களா? :-))

4:03 PM  
Blogger Unknown said...

This comment has been removed by the author.

4:07 PM  
Anonymous Anonymous said...

SAJANTHAN PLEASE STOP KADALAI PODUUU TO SENEHATHY

SENEHATHY PLEASE STOP KADALI PODU TO SAJANTHAN


BOTH OF THEM ARE TOO BORING

THANK YOU

4:36 PM  
Anonymous Anonymous said...

//Haran said

சினேகிதி, அம்மா தேடுறா... கெரியா ஓடிப் போங்கோ...//

சயந்தன் கவனிக்கவும். இன்னொரு கூட்டாளி

________________________

ஒலிப்பதிவை இப்ப கேக்க முடியேல. பிறகு கேட்டுக் கருத்தைச் சொல்லிறன்.

- வசந்தன்.

6:31 PM  
Anonymous Anonymous said...

test

6:32 PM  
Blogger சயந்தன் said...

//SENEHATHY PLEASE STOP KADALI PODU TO SAJANTHAN//

இந்த கடலை போடுவது என்பது தமிழகத்தில் வழங்கப்படுகிற ஒரு சொல். இதற்கு மாற்றீடாக ஈழத்தில் என்ன சொல் பயன்படுகிறது அல்லது எதை பாவிக்கலாம் என்பது பற்றி ஒருநாளைக்கு ஆராய இருக்கிறம். உங்கள் ஐடியாக்கு நன்றி அனானி..:)

10:21 PM  
Blogger சினேகிதி said...

அநாநிட அடுத்த பின்னோட்டம் "திருந்த மாட்டிங்கிளா"

10:35 PM  
Anonymous Anonymous said...

சோமிதரனின் பிறந்த நாளை திட்டமிட்டு மறைத்தது போலவே நேற்றுப் பிறந்த தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடிய சினேகிதியின் பிறந்த தினமும் இங்கு திட்டமிட்டு மறைக்கப் பட்டிருக்கிறது. இதெற்கெதிராக யாரும் கிளர்ந்தெள மாட்டார்களா..?

சிநேகிதிஸ் ரசிகைகள் மன்றம்
ரொறன்ரோ

7:53 AM  
Blogger சயந்தன் said...

//அதுசரி... வி.ஜெ... என்ன இந்தப் பதிவில் ஒரு பிழையா?? எத்தினை பிழை இருக்கு...//

வழி மொழிகின்றேன்:))//

இருக்கலாம்.. ஆனா அரசதப் பழசான பாடல்கள் உங்க காலத்துப் பாடல்கள் என்பதில் எந்தப் பிழையும் இருக்கப் போவதில்லைத் தானே.. :))

2:31 PM  
Anonymous Anonymous said...

ஆருயிர் தங்கை சினேகிதி தன் பிறந்தநாளை ஐஸ்கிறீம் கேக் வெட்டிக் கொண்டாடியதாக டெரொண்டோ ஸ்ரார் பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் திட்டமிட்டே மறைத்த மொக்கைப் பதிவு மன்னன் சயந்தனுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சில இடங்களில் ரசிகர்கள் தீக்குளிக்கத் தயாராக இருந்ததாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

சினேகிதி நற்பணி மன்றம்
4 ஆம் குறுக்குத் தெரு
சீனச்சாவடி
சிட்னி
அவுஸ்திரேலியா

3:50 PM  
Anonymous Anonymous said...

ஆருயிர் தங்கை சினேகிதி தன் பிறந்தநாளை ஐஸ்கிறீம் கேக் வெட்டிக் கொண்டாடியதாக டொரொண்டோ ஸ்ரார் பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் திட்டமிட்டே மறைத்த மொக்கைப் பதிவு மன்னன் சயந்தனுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சில இடங்களில் ரசிகர்கள் தீக்குளிக்கத் தயாராக இருந்ததாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

சினேகிதி நற்பணி மன்றம்
4 ஆம் குறுக்குத் தெரு

சீனச்சாவடி
சிட்னி
அவுஸ்திரேலியா

3:51 PM  
Anonymous Anonymous said...

//தீக்குளிக்கத் தயாராக இருந்ததாகவும்//

தீக்குளிக்கவா.. டீ குடிக்கவா.. ?

8:13 PM  
Anonymous Anonymous said...

டீ என்ன பால் டீயா இல்லை சாயா மட்டுமா?

8:31 PM  
Anonymous Anonymous said...

வெறும் சாயாவா, சக்கரை/சீனி போட்ட சாயாவா

8:44 PM  
Blogger Chandravathanaa said...

rasiththen

10:47 PM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

எல்லாமே ஒருகாலகட்டத்தில் `பழைய பாடல்கள்' என்ற கட்டத்திற்குள் அடங்கப்போகிறது. எப்பவுமே old is goldதான்.

'பழைய பாடல்கள்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக எல்லாக்காலத்திலும் பிரசித்தமான (all time hit) பாடல் என்று சொல்லலாமா?

1:20 AM  
Anonymous Anonymous said...

//பழைய பாடல்கள்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக எல்லாக்காலத்திலும் பிரசித்தமான (all time hit) பாடல் என்று சொல்லலாமா?//

ஆமா ஆமா.. அதனாலதான் பொடியளும் பொடிச்சியும் மலைநாடான் காலத்துப் பாடல் எண்டுறாங்க.. :)

6:50 AM  
Blogger சினேகிதி said...

இதய வீணை தூங்கும்போது பாட்டை எல்லாரும் மறந்திட்டிங்கிளா...

நற்பணி மன்ற அவுஸ்ரேலியாத் தலைவர் யாரென்று தெரியுது...மற்றதுதான் யாரென்று தெரியேல்ல...சயந்தனண்ணா சொல்ல முதல் மூட்டையைக் கட்டுங்கோ எல்லாரும்!

7:38 AM  
Blogger சோமி said...

ஏங்கள் இதய அரசியின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை வனங்குகிறோம்.

திரிஷாவுக்கு போட்டியாக கலத்தில் குதிதிருக்கும் எங்கள் தலைவியின் ரசிகர் மன்றங்கள் இனி நற்பணிமன்றங்களாக மாற்றப் படுகிறது.

எங்கள் இதய அரசி,இசைஓவியம்,புரட்சிப் பாடகி சினெகிதியின் ஆணையை ஏற்று செயற்பட ஆயிரமாயிரம் தொண்டர்கள் கத்திருக்கிறொம்.
ஆணையிடுங்கள் தாயே உங்கள் தொண்டர்கள் காத்திருகிறார்கள்.

தலைவர்
அகில உலக சினேகிதி நற்பணி மன்றம்.

8:51 AM  
Blogger சோமி said...

மேலே சினேகிதி நற்பணி மன்றத்தால் அனுப்பப் பட்ட பின்னுட்டம் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டர்கள்.அனாமதேயமாக வந்த அந்த பின்னூட்டத்தை சினேகிதியின் ரசிகர்கள் மன்ம் புண்பட்டுவிடக்கூடது என்பதாலும் எனது ரசிகர் மன்ற தோழியர்கள் மற்றும் தோழர்களுடன் முரண்பட்டுவிடாது சுமூக உறவைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதாலும் எனது பெயரில் அவர்களின் பின்னூட்டத்தை போட்டுள்ளேன்.

8:57 AM  
Anonymous Anonymous said...

//மேலே சினேகிதி நற்பணி மன்றத்தால் அனுப்பப் பட்ட பின்னுட்டம் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டர்கள//

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதுதுதுதுது..

இதற்கு முன் வந்த நற்பணிப் பின்னூட்டங்களை எழுதியது யாரென்ற கேள்விக்கு விடை கிடைத்ததா தோழர்களே..

9:13 AM  
Anonymous Anonymous said...

இங்க நாங்க ஆட்டத்த தொடரலாமா?

சிநேகிதிஸ் ரசிகைகள் மன்றம்
தமிழ்நாடு

10:07 AM  
Anonymous Anonymous said...

என்னது தயாநிதி ராஜினாமா செய்துட்டாரா?

10:10 AM  
Anonymous Anonymous said...

என்னது முரசொலி மாறன் செத்துட்டாரா?

10:27 AM  
Anonymous Anonymous said...

பூனைக் குட்டியோ, புலிக்குட்டியோ வெளிய வருணும்னா வந்துதான் ஆகும். வௌவாலுக்கு என்ன பிரச்சனை

வௌவால் ஒழிப்புக் கழகம்
பெங்களூரூ

10:33 AM  
Blogger சயந்தன் said...

Ok.. guys நாற்பதை தாண்டிட்டுது.... mission completed
உங்க பின்னூட்டங்களை சேத்து வையுங்கப்பா.. அடுத்த பதிவோடு வருகிறோம்.

10:50 AM  
Blogger U.P.Tharsan said...

:-)) இப்பிடி ஒரு கதையா!? ம்... நடக்கட்டும் நடக்கட்டும்

6:42 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home