2.4.05

எங்கிருந்து வருகிறது

பின்னூட்டமும் கொஞ்சம் குறிப்புக்களும் என்ற ஒரு பதிவினை இடுகையில் பிழைச்செய்தி காட்டியது. ஆக பதிவேற்றப்படவில்லையாக்கும் என்று விட்டு மீண்டும் ஒரு தடவை பதிந்தேன். மீண்டும் பிழைச் செய்தி! சரிதான் நாளை பார்க்கலாம் என்றால் அவை இரு பதிவுகளாக தமிழ்மணத்தில் வந்திருந்தன.

எப்பிடியோ வந்திட்டாக்கும் என்ற நினைவில் ஒன்றை எனது கணக்கில் சென்று அழித்து விடலாம் என்று கணக்கிற்குள் சென்றால் அங்கே அவ்வாறான எந்தவொரு பதிவும் இல்லை. (பயமாயிருக்கு.. ஒருவேளை.......!!)

தமிழ் மணத்தினூடாக போய் சோதனைக்காக ஒரு பின்னூட்டம் இட முயல்கையில் அவ்வாறான ஒரு பதிவு இல்லை என்றது. (ஆனால் பதிவு இருந்ததே..)

இப்பொழுது அதே பதிவினை இதுதான் கடைசி (கடுப்பில்) என்ற பெயரில் பதிவேற்றினேன். பின்னூட்டம் இட முடிகிறது. அதே நேரம் பழைய பதிவுகளை.. சும்மா போங்கப்பா.. குழப்புது..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home