என்னாலை எழுத வந்தவராம்
நானெல்லாம் இப்ப ஒண்டும் எழுதுறதில்லை. வசந்தனும் சரியா குறைச்சிட்டார். அதுக்கிப்ப என்ன எண்டும் ஏதோ பெரிசா உவை ரண்டு பேரும் முந்தி வலைப்பதிவில கோலோச்சினவை மாதிரி கதைக்கினம் எண்டு ஆரும் கேப்பினம். ஆனாலும் பாருங்கோ கோலோச்சாட்டிலும் நாங்கள் ரண்டு பேரும் நிறைய வாலாட்டினாங்கள்.
அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டாலும் வலைக்கு என்ன செய்தம் எண்ட கேள்வி நெடுநாளாய் எனக்குள்ளை இருந்தது. அது இண்டையோடை தொலையுது. இண்டைக்கு சும்மா அலசேக்கை பகீ எண்டவரின்ரை ஊரோடி எண்ட ஒரு பதிவைப் பார்த்தன். அவர் தன்ர முதலாவது பதிவில இப்பிடீ சொல்லுறார்.
ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன்.
பிறகென்ன.. நான் ஒரு புது ஆளை கொண்டு வந்திருக்கிறன் எண்ட நிம்மதியோடை போய்ச்சேரலாம் தானே..
பகீயின் ஊரோடி அகிலனின் தளம் மற்றும் இன்னொருவர் -மச்சாளின் கையைப்படித்தவர்- பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. இவையளின்ர பதிவுகளை படிக்கேக்கை சந்தோசமா இருக்கு. வாங்கோடா பொடியங்களா.. சும்மா பிளந்து கட்டுங்கோ..
வசந்தன் உமக்கு பின்னாலை மண்வாசனையோடை எழுத ஆக்கள் இல்லையெண்ட கவலை இனி உமக்கு தேவையில்லைத்தானே..
அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டாலும் வலைக்கு என்ன செய்தம் எண்ட கேள்வி நெடுநாளாய் எனக்குள்ளை இருந்தது. அது இண்டையோடை தொலையுது. இண்டைக்கு சும்மா அலசேக்கை பகீ எண்டவரின்ரை ஊரோடி எண்ட ஒரு பதிவைப் பார்த்தன். அவர் தன்ர முதலாவது பதிவில இப்பிடீ சொல்லுறார்.
ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன்.
பிறகென்ன.. நான் ஒரு புது ஆளை கொண்டு வந்திருக்கிறன் எண்ட நிம்மதியோடை போய்ச்சேரலாம் தானே..
பகீயின் ஊரோடி அகிலனின் தளம் மற்றும் இன்னொருவர் -மச்சாளின் கையைப்படித்தவர்- பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. இவையளின்ர பதிவுகளை படிக்கேக்கை சந்தோசமா இருக்கு. வாங்கோடா பொடியங்களா.. சும்மா பிளந்து கட்டுங்கோ..
வசந்தன் உமக்கு பின்னாலை மண்வாசனையோடை எழுத ஆக்கள் இல்லையெண்ட கவலை இனி உமக்கு தேவையில்லைத்தானே..