30.10.05

நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!


Image hosted by Photobucket.com

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா மொழிகளிலும் உலவ விடடனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

எம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எமது வீரவணக்கங்கள்..

எண்டு ஒரு பேப்பரில இருந்தது. படமும் அதில தான் கிடந்திச்சு. எனக்கு உந்த தீபாவளி வருசம் எல்லாம் ஏன் வந்தது எதுக்கு வந்தது எண்டதில ஆர்வம் எதுவுமில்லை.

மக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு நாள் இப்பிடி கொண்டாடுப்படுகுது எண்டால் நான் ஒவ்வொரு நாளையும் தீபாவளியாக்க try பண்ணிக்கொண்டு இருக்கிறதாலை இப்பிடித்தனித்தனி நாட்களில ஆர்வம் இல்லை.

ஆனால்.. ஆராவது சொந்தக்காரர் கூப்பிட்டு பலகாரம், முறுக்கு பொங்கல் இப்பிடி ஏதாவது தந்தால் கண்டிப்பாக போய்ச் சாப்பிடுவன். சொன்னாப் போலை நாளைக்கு மெல்பேணில பொது விடுமுறை.. தீபாவளிக்காக இல்லை. ஏதோ Melbourne cup எண்டு சொல்லுகினம். அதெதுக்கு எனக்கு.. லீவுதானே முக்கியம்..

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30

மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

Image hosted by Photobucket.com

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

Image hosted by Photobucket.com

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் - உலகம் என்ற ஒன்று பார்த்து 'உச்' மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.

28.10.05

இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக - இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?

பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.

Image hosted by Photobucket.com

27.10.05

தமிழில கதைக்கிறது எப்பிடி

கொழும்பில தனியார் வானொலிகள் வந்த போது அவையெல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய கனவாக இருந்தது. எனக்கு தெரிஞ்ச என்ரை நண்பர் ஒருவர் றேடியோவில சேருவதற்காக மட்டக்களப்பில இருந்து கொழும்பு வந்து தங்கியிருந்ததாக நான் நக்கல் அடிப்பன். நல்ல வேளை அவருக்கு அது கை கூடாத படியால் இன்று பல துறைகளில் பிரகாசிக்கின்றார்.

நான் கூட கொழும்பில் ஏதாவது வானொலிகளுக்கு ஒருநாளாவது போய் என்ரை குரலை காட்ட முடியுமா என்று யோசித்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் நினைச்சதுக்கு அறிவிப்பாளர்களை எங்காவது கண்டால் ஓடிவந்து ஓட்டோகிராப் வாங்கும் பெண்களும் நிகழ்ச்சிகளில் ஆண் அறிவிப்பாளர்களோடு வழிந்து வழிந்து தொலைபேசியூடாக பேசும் பெண்களும் காரணமாயிருக்கலாம்.

ஆனால் இப்ப, வலு இலகுவாக வானொலிகளுக்குள் நுழைய முடிகிறது.

'மச்சான்.. இண்டைக்கு சமையல் குறிப்பு சொல்லுறவள் வரமாட்டாள் எண்டு sms பண்ணியிருக்கிறாள் இண்டைக்கு சமையல் குறிப்பு இல்லை' என்றால், 'கட்டாயம் பொம்பிளை தான் சமையல் குறிப்பு சொல்ல வேணுமோ.. இஞ்சை விடு நான் செய்யிறன்' என்று கத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என செய்ய முடிகிறது. யாரையோ மனதில் வைத்து எப்போதோ எழுதிய கவிதை என அழைக்கப்படுகின்றவற்றை..' ஒரு மூண்டு நிமிசம் தாங்கடாப்பா.. இதை வாசிச்சுப் போட்டு விடுறன்' என சொல்லி அதை காற்றலைகளில் பரவ வட முடிகிறது.

'டேய் எல்லாம் முடிஞ்சுது. ஆனால் ரைம் இருக்குது.. என்ன செய்யலாம்' எண்டு கேட்டால்.. 'ஒரு பாட்டைப் போடு மச்சான்.. மிச்சத்துக்கு ஏதாவது கதைப்பம்' எண்டு முடிவெடுத்து 'என்ன கதைக்கலாம்' எண்டால் 'அதுதான்ரா.. கை வசம் நிறைய இருக்கே.. புலத்தில் தமிழ், புலத்தில் கலாசாரம் இப்பிடி ஏதாவதை கதைப்பம்' என அலட்சியமாய்ச் சொல்ல முடிகிறது.

ஆனால்.. யாரும் வந்து ஓட்டோகிராப் கேட்பதில்லை.. ஆகக் குறைந்தது.. Is that you? என்கிறார்கள்.. போனால் போகிறதென.. It was gud என்கிறார்கள்.. அவ்வளவும் தான்..

இத்தகைய ஒரு பின்புலத்தில தான்!

மெல்பேணில அவரை என்ரை நெருங்கிய நண்பர் எண்டு சொல்லலாம். என்னை விட கொஞ்சம் (கொஞ்சம் தான்) வயசு குறைஞ்சவர் எண்டாலும் ரண்டு பேருக்கும் நல்லா இணங்கிப்போகும். இதுக்குப் பிறகும் அவரை வடிவா அறிமுகம் செய்யிறதெண்டால் நிறைய உண்மைகளை போட்டு உடைக்க வேண்டியிருக்கும் எண்டாலும் என்ரை வயிறை அடிக்கடி புகைய வைக்கிறதில அவருக்கு நிறைய பங்குண்டு.

அவர் இஞ்சை சில தமிழ்ப் போட்டிகள் நாடகங்கள் எண்டு அடுத்தடுத்து பின்னித்தள்ள மெல்பேணில உள்ள ஒரு தமிழ் வானொலி அவரை பேட்டி காண கூப்பிட்டது. இங்கை இருக்கிற தமிழ் பெடி பெட்டயளுக்கு தமிழின்ர அருமை பெருமைகளை சொல்லுறதுக்காக அவரைக் கூப்பிட்டிருந்தவையாம். (அப்பிடியொரு றேடியோ இருக்கிறதெண்டதே அவை target பண்ணுற பெடி பெட்டயளுக்கு தெரியுமோ எண்டுறது எனக்குச் சந்தேகம்)

றேடியோவில பேட்டி தொடங்கி போய்க்கொண்டிருந்தது. அங்கை கேக்கிற கேள்வியளுக்கு ஆள் வடிவா நிதானமாத்தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர். சும்மா றேடியோவில மைக் கிடைச்சதெண்டுறதுக்காக கத்தரிக்காய் கறி எப்பிடி வைக்கிறது எப்பிடியெண்டு நான் புறோக்கிறாம் செய்தது போலில்லாமல் ஆள் ஏதோ பிரியோசனமா கதைச்சுக்கொண்டிருந்தவர்.

அப்ப அவரை ஒரு கேள்வி கேட்டினம்.. நீர் எப்பிடி இப்பிடி அழகா தமிழ் கதைக்கிறீர் எண்டு.. எனக்கு அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே.. சும்மா சுரீர் எண்டது. அதுக்கு அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு கவனமா கேட்டுக்கொண்டிருந்தன். அவர் சொல்லுறார்.. ' நான் வீட்டில பெற்றாரோடு தமிழில தான் கதைக்கிறனான்.. அதனாலை என்னாலை வடிவா தமிழில கதைக்க முடியுது..'

எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்லை.. சிரிச்சு சிரிச்சு களைச்சுப்போயிட்டன்.. ஏனெண்டு கேக்கிறியளோ..?

பின்னையென்ன.. இலங்கையில இருந்து ஒஸ்ரேலியா வந்து ஒரு வருடம் கூட ஆகாத ஒரு பதினெட்டு தாண்டிய தமிழ்ப் பெடியனிட்டை நீர் எப்பிடி உப்பிடி வடிவா தமிழில கதைக்கிறீர் எண்டு கேக்கிறதும் அதுக்கு அவர்.. நான் வீட்டில தமிழில தான் கதைக்கிறனான் எண்டும் பதில் சொன்னால் எனக்கு எப்பிடியிருக்கும்..

ஆளுக்கு ஒரு போனைப் போட்டன். ' ஏதோ இலங்கை முழுவதும் வெள்ளைக்காரர் இருக்கிற மாதிரியும் நீர் அவைக்கு மத்தியில வீட்டில தமிழில கதைக்கிற மாதிரியும் சொல்லுறீர் ' எண்டு சொல்ல 'சரி சரி கண்டுகொள்ளாதைங்க..' எண்டு சமாளிச்சார்.

இன்னொரு விசயமும் சொல்ல வேணும்.. இங்கை இருக்கிற பெரும்பாலான தமிழ் இளம் பெடியள் போல் அல்லாமல் அவர் என்னோடு தமிழில் தான் கதைக்கிறவர். எப்பவாவது ஆங்கிலத்தில வெளிக்கிட்டார் எண்டால்.. நான் விளங்கிக் கொள்ளுவன்..

'அம்மானைச் சுத்தி கவனத்துக்குரிய ஆக்கள் நிக்கினம்'

25.10.05

காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்

அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.

ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!

இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.

வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.

அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.

மற்றவவை இந்த முறை தான் தெரியும்.

ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.

'அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ' என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.

அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.

அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.

இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.

தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.

பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..

இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.

உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.

( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)

கடவுள் ஒருவன் தான்!

ஹி ஹி.. இது ஒண்ணும் மதப் பதிவு இல்லைங்க!

இண்டைக்கு பின்னேரம் போல வகுப்பாலை ரெயினிலை வந்து கொண்டிருந்தன். அடுத்ததோ அதுக்கடுத்ததோ ஒரு ஸ்ரேசனில ஒரு வயசான வெள்ளைக்கார அம்மா வந்து எனக்கு பக்கத்தில இருந்தா. நான் ஒரு பண்பாட்டுக்கு சிரிச்சு வணக்கம் சொல்லிப்போட்டு பக்கத்தில கிடந்த ஓசிப்பேப்பரை எடுத்து படங்கள் பாக்க தொடங்கினன். முக்கியமா எந்தக் கடையிலாவது எந்தச் சாமானாவது மலிவாப் போட்டிருக்கோ எண்டு பாக்கிறது தான் என்ரை வேலை.

பக்கத்தில இரந்த மனிசி ஒரு சின்ன சாப்பாட்டுப் பெட்டியை திறந்து பாத்திட்டு oh.. i dont like it எண்டிச்சு.. நானும் விடுப்பு பாக்கிற அவதியில பேப்பருக்குள்ளாலை தலை எடுத்து என்ன ஏதெண்டு பாத்தன். மனிசி இதுதான் சாட்டெண்டு கதைக்க தொடங்கிட்டுது.

எனக்கு முன்னாலை பின்னாலை பக்கத்திலை எல்லாம் வலு இளம் பெடி பெட்டயள் சிரிச்சு கும்மாளம் அடிச்சு கதைச்சுக் கொண்டு வர, என்ரை விதியை நொந்து கொண்டு நான் இந்த வெள்ளைக்கார ஆச்சி சொல்லுறதை கேக்க தொடங்கினன்.

அவ ஆருக்கோ கேக் செய்து அந்த சின்னப் பெட்டியில குடுத்தவவாம். அதுக்கு அந்தப் பெட்டியை தரேக்கை அவை கொஞ்ச ரொபியளை வைச்சு தந்திருக்கினமாம். தனக்கு உந்தப் பழக்கம் பிடிக்கேல்லை எண்டு அவ சொன்னா.

எனக்கும் உப்பிடியொரு பழக்கம் கொழும்பில புழக்கத்தில இருந்தது தெரியும்.

அதிலை ஒரு ரொபியை எடுத்து எனக்கு தந்தா. ரெயினுக்குள்ளை பழக்கமில்லாதவை ஆர் என்ன தந்தாலும் வாங்க கூடாது எண்டு சொல்லுறவை. எண்டாலும் அவவைப் பாத்தால் என்னை மயங்க வைச்சு களவெடுக்கிற ஆள் மாதிரியோ இல்லாட்டி என்னைக் கடத்திக்கொண்டு போற ஆள் மாதிரியோ தெரியெல்லை எண்ட படியாலை நான் thanx சொல்லி ஒரு ரொபியை வாங்கி சாப்பிட்டன்.

இப்பதான் மனிசிக்கு விசர் ஏறத் தொடங்கினது. முன் சீற்றில ஒரு இளம் பெடியும் பெட்டையும் ஒருத்தரை ஒருவர் கட்டிப்பிடிச்ச படி கொஞ்சுப் படுறதும் குலவுப்படுறதுமா இருந்திச்சினம். நான் என்ரை பாட்டில இருந்தன். வழமையா வாற ஒரு சில பெருமூச்சுக்கள் கூட இல்லை.

ஆனா.. பக்கத்தில இருந்தவ புறுபுறுக்க தொடங்கினா. its too much எண்டா அவ என்னைப்பாத்து.. அதுகள் too much எண்டால் அதுக்கு நான் என்ன செய்யிறது..?

தன்ர காலத்தில தாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தவையாம். இப்ப எல்லாம் கெட்டுப்போச்சாம் எண்டு சொல்ல எனக்கு ஆச்சரியமாக்கிடந்தது. எட.. எல்லா இடத்திலையும் இதுதான் பிரச்சனையோ..?

நானும் ஏதாவது சொல்ல வேணும் எண்டிட்டு.. உது தலைமுறை மாற்றம் எண்டு சொன்னன். அது மாறேக்க சில பழக்க வழக்கங்களும் மாறும் தானே எண்டும் சொன்னன்.

மனிசிக்கு கோபம் வந்திருக்க வேணும்.. காலம் மாறும்.. ஆக்களும் மாறுவினம்.. ஆனால் கடவுள் ஒராள்தான் அவர் மாறேல்ல.. அவர் எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருக்கிறார் எண்டு அவ லெக்சர் அடிக்க தொடங்கினா.. நாங்கள் அவரை மதிக்க வேணுமாம்.

கடைசியில நான் என்ர இடம் வந்தோடனை இறங்கிட்டன். ஒண்டை மட்டும் வீடுவரை யோசிச்சு கொண்டு வந்தன்.

அதாவது.. நானோ இல்லாட்டி இண்டைக்கு ரெயினில கொஞ்சிக்கொண்டு போன அந்த இளைஞனோ அல்லது அந்தப் பெண்ணோ.. வயசான பிறகு.. அதாவது கிழடுகள் ஆன பிறகு எங்காவது அகப்படும் ஒரு அப்பாவியிடம் இப்படிச் சொல்லிக் கொள்வோம்..

எங்கடை காலத்தில நாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தம். இப்ப சுத்த மோசம்!

21.10.05

காலமும் கதைகளும்

காலம் 1

மீண்டும் இடம் மாறிப் பூத்தது பூ

அவளோடு அதிகம் பேசச் சொல்லும் மனசு. அதை அடக்கும் புத்தி!

'வழியாதே! கௌரவமாய் இரு"

அவளைப் பார்க்கும் கணங்களில் மனசு மட்டும் பற்றி எரிய மெல்லிய புன்முறுவலோடு சேர்த்து வணக்கம் உதிர்க்கும் உதடு.

தேவைக் கேற்ப பேசினானேயாயினும் சில சமயங்களில் அத் தேவைகளும் திணிக்கப் பட்டனவாயிருந்தன அவள் அறியாமல்!

அவளும் பேசுகிறாள் தன் தேவைக் கேற்ப, அவையும் திணிக்கப் பட்ட தேவைகளோ என்று எண்ணுகையில் அங்கே நிகழிகிறது முதல்த் தவறு!

'எல்லோரும் இருக்க ஏன் என்னிடம் மட்டும்"!! என்ற படு பிற்போக்குத் தனம் உதித்தது!

காலம் 2

ரெலிபோனில் அழைத்தான்.

'உங்களோடு கொஞ்சம் பேசலாமோ"

'சொல்லங்கோ"

'இவ்வளவு நாளும் கதைச்சதை விட வித்தியாசமாய் இருக்கும். பரவாயில்லையா"

மௌனம் நீடித்தது.

'வேண்டாம். அப்பிடி எதுவும் கதைக்க வேண்டாமே"

நாக்கு உலர்ந்திருந்தது. தண்ணீர் குடித்தான்.!

'சரி.. கொஞ்ச நாளாய் அப்பிடி ஒரு எண்ணம் மனசில.. கேட்டேன்.. அவ்வளவும் தான்.!"

'கேட்டதும் நல்லது தான்.."

நல்ல வேளை நானும் ஏதாவது காரணமோ என்று அவள் கேட்கவில்லை!

'வேறை என்ன .. நான் உங்களோடு பிறகு கதைக்கிறன்!" துண்டித்தான்.

காலம் 3

'நான் நினைச்சன்! இனி என்னோடு கதைக்க மாட்டியள் எண்டு"

சிரித்தான்!

'நான் என்ன செய்ய.. ரொம்பவும் திறந்த மனசு எனக்கு! நினைத்தவுடனை கேட்டன்.."

'எனக்கும் தான்.. கேட்டவுடனை மாட்டன் என்றேன்.. அதை விட்டுவிட்டு யோசிக்க வேணும்.. ரைம் வேணும் என்றெல்லாம் கேட்க வில்லை பாத்தீங்களா"

'அப்புறம்.."

'.............................."

'.............................."

காலம் 4

மீண்டும் அவளையும் தன்னையும் ஏமாற்றுவது போலிருந்தது!

அவளோடு சண்டை பிடித்து விலகியிருக்கலாம்!

மனக்குரங்கு மறுபடியும்!

இம் முறை ஆழமாகவும் விரிவாகவும் அர்த்தமாகவும்!

'எனக்கெப்ப கல்யாணம் கட்ட வேண்டும் என்று தோன்றுதோ அப்ப நான் கட்டுவன்.! அதுக்கு முதல் காதல் என்பதெல்லாம் கிடையாது.!"

'சரி.. நான் உங்களை கல்யாணம் கட்டுறன்.. என்ன சொல்லுறியள்?"

'இதுக்கு ஓம் என்றால் காதலிக்கலாமே?"

'அதைத் தானே நானும் கேட்கிறன்"

'....................."

'......................"

'சரி எனக்கு உங்களை பிடிக்க வில்லை என்று சொன்னால் ... இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறன்."

பிரச்சனை முடிவுக்கு வந்தது!

'இப்ப உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். உணர்வுகள் எனக்கும் விளங்கும்.. இன்னும் கொஞ்சக் காலத்திலை நினைச்சு பாருங்கோ சிரிப்பாக இருக்கும்.. "

உண்மைதான்.. சின்னப் பிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறது.

காலம் 5

'நான் பிசாசு கதைக்கிறன்!"

'அட என்ரை முன்னால் காதலியும்.. இந்நாள் சகோதரியும்.. சொல்லு!" ஒருமைக்கு தாவி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

'சகோதரி எண்டால் அடி வாங்குவாய்! இப்ப நீ பெரிய ஆள். போன் பண்ணுறதுமில்லை.. கதைக்கிறதும் இல்லை"

'ஓம்.. முந்தி ஒரு தேவை யிருந்தது.. இப்ப அப்பிடி இல்லைத் தானே.. பிறகென்ன.. சரி.. முந்தி நான் அடிக்கடி எடுத்து கதைக்கும் போது தம்பி வேறையொரு பிளானோடை தான் இப்பிடி எல்லாம் கதைக்கிறார் எண்டு நினைக்க வில்லையா"

'இல்லை.. நீ அப்பிடி தெரிஞ்சிருந்தால் அப்பனுக்கு அப்பவே புத்தி சொல்லியிருப்பனே"

'அப்ப அளவுக்கதிகமா வழிய வில்லையெண்டு சொல்லு.."


காலம் 6

'ஏன் எங்களுக்கெல்லாம் உங்கடை காதல் கதைகளை சொல்ல மாட்டியளோ?"

'ஆறுதலாச் சொல்லுவம் எண்டிருந்தன்..! அதுக்குடனை வந்திட்டுதா?"

'வாழ்த்துக்கள்..!"

'நன்றி.. "

-மறுபதிப்பூ-